கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி அறிவியல் நகரில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அறிவியல் நகர் பகுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெடி பொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியாக மீள கையளிக்கப்பட்டது. அந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.பல்கலைகழக வாளகம் இயங்கி வருகின்றன. தற்போது குறித்த பகுதியில் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதற்காக நேற்றைய தினம் நிலத்தினை தோண்டிய போது அபாயகரமான வெடி பொருட்கள் மீட்கப்பட்டன. இதனால் தற்போது கட்டடப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு உள்ளன.